"நேபாளத்தின் குற்றச்சாட்டின் பின்னணியில் சீனா"-ராணுவ தளபதி பகிரங்க குற்றச்சாட்டு

0 5167

மானசரோவருக்கு இந்தியா சாலை அமைத்ததற்கு  நேபாளம் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் சீனா உள்ளது என ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி,காளி நதிக்கு மேற்கு  பகுதி குறித்து இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்பதுடன், இப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள சாலை குறித்து எதன் அடிப்படையில் நேபாளம் கேள்வி எழுப்புகிறது என வினவினார்.

யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில் உத்தராகண்டின் லிபுலேக்கில் இருந்து திபெத்தில் உள்ள மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் தூர சாலையை இந்தியா அமைத்தது. கடந்த 8 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த சாலை தங்களது எல்லைக்குள் வருவதாக நேபாள தூதர் கூறியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments